ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ஹாலிவுட் நடிகர்கள் நீண்ட வருடங்கள் வாழ்வதும், வயது முதிர்ந்த பிறகு திருமணம் செய்வதும், குழந்தை பெற்றுக் கொள்வதும் சர்வ சாதாரணமான ஒன்று. ஆனாலும் பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ 79 வயதில் குழந்தை பெற்றுள்ளார்.
காட்பாதர், ரேஜிங் புல், டாக்சி டிரைவர், குட்பெல்லாஸ், ஐரிஷ் மேன் உள்ளிட்ட புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களில் நடித்தவர் ராபர்ட் டி நீரோ. 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள நீரோ 3 முறை சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெற்றார், 5 முறை ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார்.
தற்போது அவர் 'கில்லர்ஸ் ஆப் தி பிளவர் மூன்', 'அபவுட் மை பாதர்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கான புரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் அவர் சமீபத்தில் தனக்கு 7வது குழந்தை பிறந்திருப்பதாக கூறி அதிர வைத்துள்ளார். ஆனால் குழந்தையின் பெயர், குழந்தையின் தாய் யார் என்ற விபரத்தை தெரிவிக்கவில்லை.
நீரோ 1976 இல் நடிகை டியான்னே அபோட்டை மணந்தார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். மனைவி டியான்னே அபோட்டிற்கு முன்னாள் கணவர் மூலம் பிறந்த மகளை தத்தெடுத்துக் கொண்டார். டியான்னேவை விவாகரத்து செய்து விட்டு அதன்பிறகு 1996ல் மாடல் அழகி டூக்கி ஸ்மித்துடன் உறவில் இருந்தார். இந்த தம்பதியருக்கு சோதனை குழாய் மூலம் பிறந்த இரட்டை மகன்கள் உள்ளனர். பின்னர் டூக்கியையும் பிரிந்து, 1997ல் நடிகை கிரேஸ் ஹைடவரை மணந்தார். கிரேஸ் ஹெடவருக்சுகு ஒரு மகன் பிறந்தார், வாடகை தாய் மூலம் ஒரு மகள் பிறந்தார். 20 வருட வாழ்க்கைக்கு பிறகு டி நீரோ மற்றும் ஹைடவர் பிரிந்தனர். இந்த நிலையில்தான் டி நீரோ தனது 7 வது குழந்தை பிறந்துள்ளதை அறிவித்துள்ளார்.