இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சின்னத்திரை நடிகை நிலானி தமிழில் சில சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் போலீஸ் சீருடை அணிந்து வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். சமீபகாலங்களில் தொலைக்காட்சி தொடர்களில் நிலானிக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதேசமயம் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ், போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுடன் பிசியாக உரையாடி வருகிறார்.
இந்நிலையில், நிலானியின் ரசிகர் ஒருவர் 'எப்போதான் புதுச்சேரிக்கு வருவீங்க. நான் எப்போ நிலானி மக்கள் சேவை இயக்கம்' என்று பதிவிட்டிருந்தார். அதற்கு ரியாக்ட் செய்து ரீல்ஸ் வெளியிட்டுள்ள நிலானி, 'என்னது மக்கள் இயக்கமா? இதுவரை இதப்பத்தி யோசிக்காம விட்டுட்டேன். இனிமேல் யோசிக்கிறேன்' என்று பதிலளித்துள்ளார்.
இதைபார்த்த நெட்டிசன்கள் பப்ளிசிட்டிக்காக நிலானியே இப்படி கமெண்ட் செய்திருப்பதாக கலாய்த்து வருகின்றனர்.