விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" |

உலகம் முழுவதும் நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கிண்டி கவர்னர் மாளிகையில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களின் அம்மாக்களுக்கு அன்னையர் தின சிறப்பு விருது வழங்கப்பட்டது.
இதில் வறுமையான சூழ்நிலையில் இருந்து தன் மகளை தனி ஆளாக வளர்த்து நடிகையாக்கிய ஐஸ்வர்யா ராஜேஷின் தாயார் நாகமணி அம்மையாருக்கு சிறந்த அன்னை விருதை கவர்னர் ஆர்.என்.ரவியும், அவரது மனைவி லட்சுமி ரவியும் இணைந்து வழங்கினார்கள். இவருடன் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் தாய் என்.நாகலட்சுமி, பாரா ஒலிம்பிக் கிரிக்கெட் வீரர் பொன்ராஜின் தாய் ஞானசுந்தரி, திருநங்கை கிரேஸ் பானுவின் தாய் ஹீனா உள்ளிட்ட 8 பேருக்கு சிறந்த அன்னை விருது வழங்கப்பட்டது.