ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வருகிற 2064ம் ஆண்டு சென்னை, ஐதராபாத், பெங்களூரு மாதிரியான பெரு நகரங்கள் அழிந்து மக்கள் தண்ணீருக்கும், உணவுக்கும் அலையும் சூழ்நிலை வந்தால் அப்போது மக்கள் எந்த மாதிரியான மனநிலையுடன் இருப்பார்கள் என்பதை கதை களமாக கொண்டு உருவாகி உள்ள படம் கலியுகம். பிரமோத் சுந்தர் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கிஷோர், இனியன் சுப்பிரமணி, ஹரி, அஸ்மல், சந்தோஷ், மணி, ஆர்யா லட்சுமி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வின்சன் இசையமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் பிரமோத் சுந்தர் கூறும்போது “ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை என்பது உணவும் - தண்ணீரும்தான். இது இரண்டும் கிடைக்காத பட்சத்தில் மனிதனிடத்தில் மனித நேயம் என்பது இருக்குமா? என்கிற கற்பனை ஓட்டத்துடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் உணவுக்காகவும் - தண்ணீருக்காகவும் போராடும் போராட்டமே இந்த படம். விவசாய பாதுகாப்பு, தண்ணீர் சிக்னம் இல்லாவிட்டால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை இந்த படம் சொல்லும்” என்கிறார்.