இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் |
வருகிற 2064ம் ஆண்டு சென்னை, ஐதராபாத், பெங்களூரு மாதிரியான பெரு நகரங்கள் அழிந்து மக்கள் தண்ணீருக்கும், உணவுக்கும் அலையும் சூழ்நிலை வந்தால் அப்போது மக்கள் எந்த மாதிரியான மனநிலையுடன் இருப்பார்கள் என்பதை கதை களமாக கொண்டு உருவாகி உள்ள படம் கலியுகம். பிரமோத் சுந்தர் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கிஷோர், இனியன் சுப்பிரமணி, ஹரி, அஸ்மல், சந்தோஷ், மணி, ஆர்யா லட்சுமி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வின்சன் இசையமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் பிரமோத் சுந்தர் கூறும்போது “ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை என்பது உணவும் - தண்ணீரும்தான். இது இரண்டும் கிடைக்காத பட்சத்தில் மனிதனிடத்தில் மனித நேயம் என்பது இருக்குமா? என்கிற கற்பனை ஓட்டத்துடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் உணவுக்காகவும் - தண்ணீருக்காகவும் போராடும் போராட்டமே இந்த படம். விவசாய பாதுகாப்பு, தண்ணீர் சிக்னம் இல்லாவிட்டால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை இந்த படம் சொல்லும்” என்கிறார்.