ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஹீரோவாகவும், குணச்சித்ர வேடங்களிலும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சரத்பாபு. உடல்நலக்குறைவால் ஐதராபாத் மருத்துவமனையில் நேற்று காலமானார். தெலுங்கு பிலிம் சேம்பரில் நேற்று அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. தெலுங்கு திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டது. இங்கு அவரின் தி.நகர் இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. திரையுலகினர், ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். திரையுலகினர் பலரும் சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவித்தனர்.
ரஜினி, ஒய்.ஜி. மகேந்திரன், சுஹாசினி, சரத்குமார், ராதிகா, சுரேஷ் கிருஷ்ணா, பாக்யராஜ், சூர்யா, கார்த்தி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் சரத்பாபுவின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள மயானத்தில் வைத்து இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் சரத்பாபுவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
செந்தாழம்பூவில் வந்தாண்டிய தென்றல் என பாடியவர் காற்றில் கரைந்து போனார்.