சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் |
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஹீரோவாகவும், குணச்சித்ர வேடங்களிலும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சரத்பாபு. உடல்நலக்குறைவால் ஐதராபாத் மருத்துவமனையில் நேற்று காலமானார். தெலுங்கு பிலிம் சேம்பரில் நேற்று அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. தெலுங்கு திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டது. இங்கு அவரின் தி.நகர் இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. திரையுலகினர், ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். திரையுலகினர் பலரும் சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவித்தனர்.



ரஜினி, ஒய்.ஜி. மகேந்திரன், சுஹாசினி, சரத்குமார், ராதிகா, சுரேஷ் கிருஷ்ணா, பாக்யராஜ், சூர்யா, கார்த்தி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் சரத்பாபுவின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள மயானத்தில் வைத்து இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் சரத்பாபுவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
செந்தாழம்பூவில் வந்தாண்டிய தென்றல் என பாடியவர் காற்றில் கரைந்து போனார்.