ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தென்னிந்திய சினிமாவில் 200 படங்களுக்கு மேல் நடித்திருப்பவர் சரத்பாபு. கடைசியாக தமிழில் வசந்த முல்லை என்ற படத்தில் நடித்தார். செப்சிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட சரத் பாபு ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மே 22 ஆம் தேதியான நேற்று மதியம் அவர் மரணம் அடைந்தார். ரத்பாபு இரண்டு முறை திருமணம் செய்து கொண்டவர். ஆனபோதும் அவருக்கு வாரிசு இல்லை. ஆந்திராவில் உள்ள ஹார்சலி ஹில்ஸ் என்ற பகுதியில் வீடு கட்டி தனது கடைசி காலத்தை அங்கு செலவிடுவதற்கு திட்டமிட்டிருந்தார் சரத்பாபு. இதற்காக அங்கு இடம் வாங்கி வீடும் கட்டி வந்தார். ஆனால் அந்த வீட்டை கட்டி முடிப்பதற்குள்ளே அவர் இறந்து விட்டார். அந்த வகையில் சரத் பாபுவின் கடைசி ஆசை நிறைவேறாமல் போய்விட்டது. ஏற்கனவே தனது இளமைகாலத்தில் போலீஸாக வேண்டும் என விரும்பினார். ஆனால் அவருக்கு இருந்த கிட்டப்பார்வை பிரச்னையால் அது நடக்காமல் போக, சினிமாவில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.