தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தென்னிந்திய சினிமாவில் 200 படங்களுக்கு மேல் நடித்திருப்பவர் சரத்பாபு. கடைசியாக தமிழில் வசந்த முல்லை என்ற படத்தில் நடித்தார். செப்சிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட சரத் பாபு ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மே 22 ஆம் தேதியான நேற்று மதியம் அவர் மரணம் அடைந்தார். ரத்பாபு இரண்டு முறை திருமணம் செய்து கொண்டவர். ஆனபோதும் அவருக்கு வாரிசு இல்லை. ஆந்திராவில் உள்ள ஹார்சலி ஹில்ஸ் என்ற பகுதியில் வீடு கட்டி தனது கடைசி காலத்தை அங்கு செலவிடுவதற்கு திட்டமிட்டிருந்தார் சரத்பாபு. இதற்காக அங்கு இடம் வாங்கி வீடும் கட்டி வந்தார். ஆனால் அந்த வீட்டை கட்டி முடிப்பதற்குள்ளே அவர் இறந்து விட்டார். அந்த வகையில் சரத் பாபுவின் கடைசி ஆசை நிறைவேறாமல் போய்விட்டது. ஏற்கனவே தனது இளமைகாலத்தில் போலீஸாக வேண்டும் என விரும்பினார். ஆனால் அவருக்கு இருந்த கிட்டப்பார்வை பிரச்னையால் அது நடக்காமல் போக, சினிமாவில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.