தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி. வி. பிரகாஷ் குமார் தொடர்ந்து முன்னணி கதாநாயகர்கள் படத்திற்கு இசையமைத்து வருகிறார். நடிகராக தற்போது அடியே , டியர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். கோவையில் அவர் நடத்தும் ஆயிரத்தில் ஒருவன் இசை நிகழ்ச்சிக்காக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை பற்றி பகிர்ந்துள்ளார். அதன்படி, "ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். அது மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படம். அந்த படம் நடந்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன். செல்வராகவனின் அடுத்த பாகத்தின் கதையை கேட்க நான் மிக ஆர்வமாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்த ‛ஆயிரத்தில் ஒருவன்' படம் 2010ல் வெளியானது. அப்போது பெரியளவில் வரவேற்பை பெறாத இந்த படத்தை இப்போது பலரும் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக அந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் கொடுத்த இசை பெரியளவில் பேசப்பட்டது. ஆயிரத்தில் ஒருவன் 2 உருவாக உள்ளதாகவும், அதில் தனுஷ் நடிப்பதாகவும் ஏற்கனவே அறிவிப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.