தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

நடிகர் ரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறு அந்த நாடு அழைப்பு விடுத்துள்ளது. தென்னிந்தியாவுக்கான இலங்கை துணை தூதர் வெங்கடேஷ்வரன், சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்தை நேற்று சந்தித்து பேசினார். அப்போது ரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறு வெங்கடேஷ்வரன் அழைப்பு விடுத்தார். ராமாயண இதிகாசத்தில் தொடர்புடைய புனித தலங்களையும், இதர பாரம்பரிய கலாசார மற்றும் மத சின்னங்களை பார்வையிடவும் இலங்கைக்கு வருமாறு வெங்கடேஷ்வரன் வேண்டுகோள் விடுத்தார்.
ரஜினியின் வருகை இந்தியா, இலங்கை இரு நாடுகளின் சுற்றுலா வளர்ச்சி, திரைப்பட வளர்ச்சி ஆகியவற்றுக்கு அது உதவும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். தற்போது கையில் உள்ள படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு கண்டிப்பாக இலங்கை வருவதாக ரஜினி உறுதி அளித்துள்ளார். ரஜினியை இலங்கை தூதர் சந்தித்திருப்பது இதுவே முதல் முறை, ஏற்கெனவே சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் நாடுகள் ரஜினியை தங்கள் நாட்டுக்கு விருந்தினராக அழைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.