தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழில் 'அழகிய தீயே' படத்தில் அறிமுகமாகி சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, அமிர்தம், ராமன் தேடிய சீதை, சில நேரங்களில், பாசக்கிளிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். மலையாளத்தில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நவ்யா, திரையுலகில் இருந்து சற்று விலகி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடித்து வருகிறார். தற்போது 'ஜானகி ஜானே' என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.
படத்தின் புரமோசன் நிகழ்வுகளில் நவ்யா பங்கேற்று வந்தார். கோழிகோட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. புரமோசன் பணிகளால் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு வகையான உணவு அருந்தியதால் அவருக்கு புட் பாய்சன் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. நவ்யா பூரண நலத்துடன் திரும்பி வரும் வரை புரமோசன் பணிகளை நிறுத்தி வைப்பதாக படத்தின் தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.