தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படம் இன்னும் நான்கு மாதங்களுக்குப் பிறகு அக்டோபர் 19ம் தேதிதான் வெளியாக உள்ளது. ஆனால், அதற்குள்ளாகவே படத்தின் வியாபாரம் பற்றிய தகவல்களை சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்பி வருகிறார்கள். அதற்குப் பின்னணியில் இருப்பது விஜய்யா, அல்லது படத்தின் தயாரிப்பாளரா என்பது தெரியவில்லை.
தமிழ் சினிமாவில் இதுவரை நடக்காத அளவிற்கு ஒரு பெரும் வியாபாரம் அப்படத்திற்கு நடந்துள்ளதாக பரப்பி வருகிறார்கள். இதுவரையில் இல்லாத அளவிற்கு டிஜிட்டல் உரிமை, சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை, வெளிநாட்டு உரிமை விற்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். ஏற்கெனவே, இப்படத்திற்கான கேரள வினியோக உரிமையும் அதிக விலைக்கு விற்கப்பட்டதாகச் சொன்னார்கள். இவ்வளவு உரிமைகள் ஒரு பக்கம் இருந்தாலும் தமிழக வெளியீட்டு உரிமை அல்லது ஏரியா வாரியாக விற்கப்படும் உரிமை ஆகியவைதான் முக்கியமானவை. இவற்றை அதிக விலைக்கு விற்கவே மற்ற உரிமைகளைப் பற்றிய தகவல்களைப் பரப்புகிறார்கள் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
ஏற்கெனவே, விஜய் அவருடைய அடுத்த படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றும் சிலர் இரண்டு வாரங்களுக்கு முன்பு தகவலைப் பரப்பினார்கள். இப்போது 'லியோ' உரிமை பற்றிய தகவல் பரப்பப்டுகிறது. இந்த வருடத்தின் அதிக வியாபாரமாக 'லியோ' படம்தான் இருக்கும். அதற்குப் பிறகே ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படம் இருக்கும் என ரஜினி ரசிகர்களையும் வம்புக்கிழுக்கிறது அந்த 'லியோ' குரூப்.