அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவி தற்போதும் பிஸியான நடிகராக சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் சிரஞ்சீவி. அப்போது முன்கூட்டியே மருத்துவ பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் விதமாக அவர் பேசும்போது, தான் அப்படி மருத்துவ பரிசோதனை செய்து கொண்டபோது நாளடைவில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய சில காரணிகள் இருப்பது தெரிய வந்ததாகவும் உடனடியாக சிறிய அறுவை சிகிச்சை மூலம் அவை அகற்றப்பட்டதாகவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து இந்த செய்தி சிரஞ்சீவி கேன்சரால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்பது போலவும் அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்பது போலவும் வெளியாக துவங்கின. சிரஞ்சீவியின் கவனத்திற்கு இது வந்ததும் உடனடியாக தனது சோசியல் மீடியா பக்கம் மூலமாக இதுகுறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், 'மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிற விதமாகத்தான், அப்படி ஒரு மருத்துவ பரிசோதனையை நான் செய்து கொண்டபோது முன்கூட்டியே புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய காரணிகளை கண்டறிய முடிந்தது என்றும் கொஞ்சம் நாட்கள் தாமதம் ஆகியிருந்தால் அது புற்றுநோயாக மாறி இருப்பதற்கு வாய்ப்பு அதிகம் இருந்திருக்கும் என்பதையும் உணர்த்தும் விதமாகத்தான் நான் பேசினேன். ஆனால் நானே புற்றுநோயால் பாதிக்கப்பட்டது போன்று செய்திகள் தவறாக வெளியாகி வருகின்றன. தயவுசெய்து இப்படி செய்திகள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார் சிரஞ்சீவி.