தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சமீபத்தில் வெளியாகி பரபரப்பையும், சர்ச்சைகளையும் கிளப்பிய படம் "தி கேரளா ஸ்டோரி". அடா சர்மா, சித்தி இத்னானி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தனர். கேரளாவில் பெண்களை மதமாற்றம் செய்து அவர்களை பயங்கரவாத அமைப்புகளில் சேர்த்துவிடுவது மாதிரியான கதைகளத்தில் வெளியானது. பல மாநிலங்களில் எதிர்ப்பு, சர்ச்சை, தடைகளை கடந்து இந்தப்படம் ரூ.200 கோடி வசூலை சந்தித்தது.
சித்தி இத்னானி அளித்த பேட்டி ஒன்றில் தி கேரளா ஸ்டோரி படத்தில் நடித்தது குறித்து பகிர்ந்துள்ளார். அதில், ''தி கேரளா ஸ்டோரி படத்தின் கதையை என்னிடம் கூறும்போது இது வழக்கமான கமர்ஷியல் சினிமா இல்லை என்பது புரிந்து இப்படம் வெளியாகும்போது எந்த மாதிரி பிரச்சினைகள் வரும் என்ற கேள்விகளும் என் மனதில் ஏற்பட்டது. இதே உணர்வில் தான் மற்றவர்களும் இருந்தார்கள். இதையெல்லாம் தாண்டி படத்தின் மையக்கரு பார்வையாளர்களுக்கு சென்றால் இந்த படத்தை எடுத்த நோக்கத்தை நிறைவேற்றும். இதனை ஆலோசித்தே படத்தில் நடிக்க சம்மதம் சொன்னேன்'' என்றார்.