5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
சமீபத்தில் வெளியாகி பரபரப்பையும், சர்ச்சைகளையும் கிளப்பிய படம் "தி கேரளா ஸ்டோரி". அடா சர்மா, சித்தி இத்னானி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தனர். கேரளாவில் பெண்களை மதமாற்றம் செய்து அவர்களை பயங்கரவாத அமைப்புகளில் சேர்த்துவிடுவது மாதிரியான கதைகளத்தில் வெளியானது. பல மாநிலங்களில் எதிர்ப்பு, சர்ச்சை, தடைகளை கடந்து இந்தப்படம் ரூ.200 கோடி வசூலை சந்தித்தது.
சித்தி இத்னானி அளித்த பேட்டி ஒன்றில் தி கேரளா ஸ்டோரி படத்தில் நடித்தது குறித்து பகிர்ந்துள்ளார். அதில், ''தி கேரளா ஸ்டோரி படத்தின் கதையை என்னிடம் கூறும்போது இது வழக்கமான கமர்ஷியல் சினிமா இல்லை என்பது புரிந்து இப்படம் வெளியாகும்போது எந்த மாதிரி பிரச்சினைகள் வரும் என்ற கேள்விகளும் என் மனதில் ஏற்பட்டது. இதே உணர்வில் தான் மற்றவர்களும் இருந்தார்கள். இதையெல்லாம் தாண்டி படத்தின் மையக்கரு பார்வையாளர்களுக்கு சென்றால் இந்த படத்தை எடுத்த நோக்கத்தை நிறைவேற்றும். இதனை ஆலோசித்தே படத்தில் நடிக்க சம்மதம் சொன்னேன்'' என்றார்.