5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. மறுபக்கம் தனது அரசியல் பயணத்துக்கான அடுத்த கட்ட நகர்வுகளையும் செய்து வருகிறார். சமீபகாலமாக முக்கிய தலைவர்களின் சிலைக்கு மாவட்டம் வாரியாக அவரது மக்கள் இயக்கத்தினரை மாலை அணிவிக்க சொல்லி உத்தரவிட்டார். அடுத்தப்படியாக வறுமை ஒழிப்பு தினத்தில் மாவட்டம் தோறும் மதியம் ஒருவேளை உணவு வழங்கினார்.
இப்போது மாணவர்களை சந்திக்க உள்ளார். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவர்களை சந்திக்கிறார். இதுதொடர்பாக விஜய் சார்பில் வெளியிட்ட அறிக்கை விபரம் வருமாறு....
‛‛சென்னை, நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் வருகின்ற ஜூன் 17ம் தேதி அன்று நடந்து முடிந்த 10ம், 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் உள்ள தொகுதிகளில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை அவரது பெற்றோர்களுடன் நேரில் சந்தித்து சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்குகிறார் விஜய்'' என்று அகில இந்திய தலைமை விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளனர்.