கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது |
சின்னத்திரை நடிகர்களான அர்னவ் மற்றும் திவ்யா ஸ்ரீதர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு போலீஸ் ஸ்டேஷன் வரை பஞ்சாயத்து சென்றது. செல்லம்மா தொடரில் நடித்து வரும் அன்ஷிதா என்ற நடிகையுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அர்னவ் தன்னை கழட்டிவிட முயற்சிப்பதாகவும், அடித்து துன்புறுத்துவதாகவும் திவ்யா ஸ்ரீதர் புகார் கூறினார். அதேசமயம் திவ்யாவின் குற்றச்சாட்டுக்கு அன்ஷிதா எந்த மறுப்பும் அப்போது சொல்லவில்லை.
அதேசமயம் அர்னவ் அன்ஷிதாவுடன் மிகவும் நெருக்கம் காட்டி வருகிறார். இருவரும் அடிக்கடி ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அதிலும் தற்போது இருவரும் வெளியிட்டுள்ள ஒரு ரீல்ஸ் வீடியோவில் 'என் சொந்தமெல்லாம் நீதான் என்பது போல்' அன்ஷிதா அர்னவை பிடித்து இழுத்து நெருக்கமாக நின்று போஸ் கொடுத்துள்ளார். இதையெல்லாம் பார்க்கும் ரசிகர்கள் திவ்யா ஸ்ரீதர் அர்னவ்-அன்ஷிதா பற்றி கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை தான் என அதிர்ந்து போயுள்ளனர்.