கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

சண்டை இயக்குனர்கள் படம் இயக்குவது ஒன்றும் புதிதில்லை. ஏற்கெனவே கனல் கண்ணன், ஜாக்குவார் தங்கம், பெப்சி விஜயன் உள்ளிட்ட பலர் படம் இயக்கி இருக்கிறார்கள். அந்த வரிசையில் அடுத்து வருகிறார் அனல் அரசு. முன்னணி சண்டை இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றிய அனல் அரசு 2004ம் ஆண்டு 'அருள்' படத்தின் மூலம் சண்டை இயக்குனர் ஆனார். அதன்பிறகு 100க்கும் மேற்பட்ட படங்களில் சண்டை இயக்குனராக பணியாற்றினார். சிங்ககுட்டி, ராஜபாட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் உள்ளார். அடுத்து அவர் இயக்குனர் ஆகிறார். தற்போது படத்தின் பணிகளை துவங்கி உள்ளார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் படமாக இது உருவாகிறது. இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வை தற்போது நடத்தி வருகிறார். வருகிற 16ம் தேதி ஏவிஎம் ஸ்டூடியோவில் நடிகர், நடிகை தேர்வு நடக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.