ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ. வசந்த மாளிகை படத்தின் மூலம் புகழின் உச்சியை தொட்டவர். எம்.ஜி.ஆருடன் கண்ணன் என் காதலன், ஊருக்கு உழைப்பவன், தலைவன் படங்களில் நடித்தார். சிவாஜியுடன் வசந்த மாளிகை, உயர்ந்த மனிதன், நிறைகுடம், குலமா குணமா, சிவகாமியின் செல்வன், வாணி ராணி, ரோஜாவின் ராஜா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 74 வயதாகும் வாணிஸ்ரீ 1978ம் ஆண்டு முதல் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.
ஏற்கெனவே பல விருதுகளை பெற்றுள்ள வாணிஸ்ரீக்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள காந்தி தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிகர்நிலைப்பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது. இந்த பல்கலைகழகத்தின் 14வது பட்டமளிப்பு விழாவில் இந்த பட்டம் வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் வீரேந்தர் சிங் சவுகான் வழங்கி கவுரவித்தார்.