தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ. வசந்த மாளிகை படத்தின் மூலம் புகழின் உச்சியை தொட்டவர். எம்.ஜி.ஆருடன் கண்ணன் என் காதலன், ஊருக்கு உழைப்பவன், தலைவன் படங்களில் நடித்தார். சிவாஜியுடன் வசந்த மாளிகை, உயர்ந்த மனிதன், நிறைகுடம், குலமா குணமா, சிவகாமியின் செல்வன், வாணி ராணி, ரோஜாவின் ராஜா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 74 வயதாகும் வாணிஸ்ரீ 1978ம் ஆண்டு முதல் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.
ஏற்கெனவே பல விருதுகளை பெற்றுள்ள வாணிஸ்ரீக்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள காந்தி தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிகர்நிலைப்பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது. இந்த பல்கலைகழகத்தின் 14வது பட்டமளிப்பு விழாவில் இந்த பட்டம் வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் வீரேந்தர் சிங் சவுகான் வழங்கி கவுரவித்தார்.