நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ள படம் 'தண்டட்டி'. அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார். பசுபதி, ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வருகிற 28ம் தேதி படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பாளர் சதீஷ் குமார் இந்த படத்தை தடை செய்ய சொல்லி தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: எனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் கடந்த 2017ம் ஆண்டு 'அண்டாவ காணோம்' படத்தைத் தயாரித்து அதற்கு தணிக்கையும் செய்திருக்கிறோம். அப்போது படத்தை வெளியிட முடியாமல் சில காரணங்களால் தடைபட்டு, இப்போது வெளியிட தயாராகி வருகிறோம். இந்த நிலையில், 'அண்டாவ காணோம்' படத்தின் கதையும், பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள 'தண்டட்டி' படத்தின் கதையும் ஒன்றாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 'தண்டட்டி' திரைப்படத்தைப் பார்த்து என்னுடைய கதையோடு பொருந்திப் போயிருந்தால், 'தண்டட்டி' படத்தை வெளியிட தடை விதிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.