தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நடிகை ஊர்வசி எண்பதுகளின் துவக்கத்தில் இருந்து மலையாளம் மற்றும் தமிழில் கதாநாயகியாக நடித்து வந்தவர். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் குணச்சித்திர நடிகையாக மாறி இப்போதும் தொடர்ந்து பிசியான நடிகையாக நடித்து வருகிறார். குறிப்பாக தனக்கென தனித்துவமாக உள்ள காமெடி நடிப்பில் தொடர்ந்து அசத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கென தனிக்கணக்கு துவங்கியுள்ளார் ஊர்வசி. அப்போது தன் மகன் இஷான் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
அதற்கு ஏராளமான ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். மேலும் அவரது மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிடும்படி கோரிக்கையும் வைத்தனர். இந்த நிலையில் தனது மகள் குஞ்சட்டா மற்றும் மகன் கிஷான் இருவருடனும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஊர்வசி. வழக்கம்போல இந்த புகைப்படத்திற்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.