திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
ஏசியன் சினிமாஸ் என்ற நிறுவனம் தெலுங்குத் திரையுலகத்தில் உள்ள முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து மல்டிபிளக்ஸ் தியேட்டர்களைக் கட்டி திறந்து வருகிறது. அந்த விதத்தில் மகேஷ்பாபு, விஜய் தேவரகொண்டா, அல்லு அர்ஜுன் ஆகியோரது பெயரில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.
அடுத்து ஏசியன் சினிமாஸ் நிறுவனம் சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மல்டிபிளக்ஸ் தியேட்டரை கட்டப் போகிறது. நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற அல்லு அர்ஜுனின் எஎஎ மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறப்பு விழாவின் போது நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து ஏசியன் சினிமாஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுனில் நரங் தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் தற்போது சென்னையில் எந்த ஒரு நடிகருக்கும் சொந்தமாக தியேட்டர்கள் கிடையாது. நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உள்ள சிவகார்த்திகேயன் முதல் முறையாக தியேட்டர் தொழிலில் இறங்க உள்ளார்.