தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஒம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், கிரித்தி சனோன், சைப் அலிகான் மற்றும் பலர் நடிப்பில் ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் 'ஆதிபுருஷ்'. இப்படம் நாளை(ஜூன் 16) உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் தியேட்டர்களில் வெளியாகிறது.
'பாகுபலி' படத்திற்குப் பிறகுதான் இந்திய அளவிலான வசூல் 1000 கோடி என்ற சாதனையைப் படைக்க ஆரம்பித்தது. அதற்குப் பிறகு 'கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர், பதான்'' ஆகிய படங்களும் அந்த சாதனையைப் படைத்தன. அடுத்து அப்படிப்பட்ட சாதனையை 'ஆதிபுருஷ்' படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்திற்கான முன்பதிவு வட இந்திய மாநிலங்களிலும், தெலுங்கு மாநிலங்களிலும் சிறப்பாக இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிவிஆர் தியேட்டர்களில் மட்டும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவு நடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். முதல் நாள் வசூலாக மட்டும் சுமார் 80 கோடிக்கும் அதிகமாகவும், முதல் வார இறுதியில் 200 கோடி வரையிலும் இப்படம் வசூலிக்கும் என்றும் சொல்கிறார்கள்.
ஆனால், இப்படத்திற்கு தெலுங்கைத் தவிர மற்ற மொழிகளில் எந்தவிதமான பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தாமல் விட்டுள்ளார்கள். இது பிரபாஸ் ரசிகர்களிடத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு பிரம்மாண்ட படத்தை எடுத்துவிட்டு திருப்பதியில் மட்டும் விழாவை நடத்திவிட்டு மற்ற மாநிலங்களில் எதையும் செய்யாததும் வினியோகஸ்தர்களிடையே ஏமாற்றத்தைத் தந்துள்ளது.