தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

பிரபல திரைப்பட நடிகையான வினோதினி சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக அரசியல் சார்ந்த கருத்துகளை பேசி வருகிறார். இந்நிலையில், அவர் தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியில் உறுப்பினராக இணைந்துள்ளார். இணைந்த பின் அவர் வெளியிட்ட முதல் பதிவிலேயே சில அரசியல் கட்சிகளை நாசூக்காக கலாய்த்துள்ளார்.
கடவுளுக்கும் அஞ்ஞானவதிக்கும் இடையே நடக்கும் உரையாடலாக அந்த பதிவை வெளியிட்டுள்ள வினோதினி, மதத்தின் அடிப்படையில் ஏன் கட்சியில் சேரவில்லை என்று கடவுள் கேட்க, அதற்கு வாரம் ஒருமுறை கள்ள ஆடியோ, வீடியோ ரெக்கார்டிங் செய்யும் கருவிகள் இருப்பதை கண்டுபிடிக்க காசு இல்லை என்று பதில் கூறியுள்ளார். அதேபோல் பகுத்தறிவு பேசுற கட்சியில் சேரலையா? என்று கடவுள் கேட்க. 'பகுத்தறிவா? அப்படினா என்னன்னு கேட்குறாங்க' என்று அந்த கட்சிக்காரர்களுக்கே பகுத்தறிவு இல்லை என கிண்டலடித்துள்ளார். இப்படியாக நீண்டுகொண்டே செல்லும் அந்த உரையாடலில் கடைசியில் மைய அரசியல் என்று குறிப்பிட்டு தான் மக்கள் நீதி மையம் கட்சியில் சேர்ந்திருப்பதை தெரிவித்துள்ளார். வினோதினியின் இந்த நக்கலான பதிவை படிக்கும் பலரும் ஆரம்பமே அமர்க்களமா? என ஜாலியாக கேட்டு வருகின்றனர்.