ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாகி உள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சலார் திரைப்படம் வெளியாக இருக்கிறது. கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் டைரக்ஷனில் பிரபாஸ் நடிப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ஆதிபுருஷ் படத்தை விட அதிகமாகவே இருக்கிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, வில்லனாக நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனையடுத்து இந்த படத்தில் பணியாற்றிய படக்குழுவினர் அனைவருக்குமே தனது சொந்த பணத்தில் இருந்து தலா பத்தாயிரம் ரூபாயை அவர்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தியுள்ளார் பிரபாஸ். சலார் படக்குழுவினரின் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்துள்ளார் பிரபாஸ்.