2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? |
ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், கிரித்தி சனோன், சைப்அலிகான் மற்றும் பலர் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான படம் 'ஆதிபுருஷ்'. ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் என்றுதான் இப்படத்தைப் பற்றி அனைவரும் பேசினார்கள், எழுதினார்கள். ஆனால், படத்தைப் பார்த்த பின் சில பல சர்ச்சை எழுந்ததால் இது குறித்து படத்தின் எழுத்தாளர் மனோஜ் முன்தஷிர் சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார்.
“படத்தின் பெயர் 'ஆதிபுருஷ்'. நான் முன்பும் சொன்னேன், இப்போது மீண்டும் சொல்கிறேன், நாங்கள் ராமாயணத்தை எடுக்கவில்லை. இதைப் படமாக்க அது எங்களைத் தூண்டியுள்ளது. படத்தின் ஆரம்பத்தில் 'பொறுப்பு துறப்பு' என்று இதைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளோம். இப்படத்திற்கு 'ஆதிபுருஷ்' என்று பெயர் வைத்ததற்குப் பதிலாக 'ராமாயண்' எனப் பெயர் வைத்திருந்தால் எங்களுக்கு மார்க்கெட்டிங் செய்வதற்கும் சுலபமாக இருந்திருக்கும். ராமாயணத்தின் 'யுத்த காண்டம்' பகுதியை மட்டும் படத்தில் சித்தரித்துள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்.
மனோஜின் இந்த பேட்டியும், கருத்தும் மீண்டும் ஒரு வாதத்தை ஆரம்பித்து வைத்துள்ளது.