ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' |

ஒரு திரைப்படத்தில் பெரும்பாலான காட்சிகளில் பிணமாக நடிப்பது மிகவும் அபூர்வமானது. ஒரு நாள் பிணமாக நடித்தால் கூட நடிகர், நடிகைகள் அதற்கொரு பரிகாரம் செய்வார்கள். ஆனால் நடிகை ரோகினி 'தண்டட்டி' படத்தில் 30 நாள் பிணமாக நடித்துள்ளார். இதற்கு முன் நாகேஷ் 'நம்மவர்' படத்தில் பிணமாக நடித்தார். 'ஏலே' படத்தில் சமுத்திரகனி பிணமாக நடித்தார். சமீபத்தில் வெளியான தலைக்கூத்தல் படத்தில் துணை இயக்குனர் ஒருவர் பிணமாக நடித்தார். தற்போது ரோகினி நடித்துள்ளார்.
கிராமத்து மூதாட்டியான ரோகினி மொத்த குடும்பத்தையும் தாங்கி பிடித்தவர். அவர் திடீரென இறந்து விடவே அவர் காதில் அணிந்திருந்த தண்டட்டியை யாரோ திருடிவிடுகிறார்கள். அதை கண்டுபிடிக்க வருகிறார் போலீஸ் ஏட்டு பசுபதி. இதுதான் படத்தின் கதை. இதற்காக பெரும்பாலான காட்சிகளில் பிணமாக நடித்துள்ளார் ரோகினி.
இதுகுறித்து அவர் கூறியதாவது: தண்டட்டி படத்தில் தங்கப் பொண்ணு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். உண்மையிலேயே அவ்வளவு பெரிய தண்டட்டி அணிந்து நடித்தது சந்தோஷமாக இருந்தது. அந்த ஊரில் ஏராளமான பெண்கள் இந்த தண்டட்டியை அணிந்து உள்ளனர். கதைப்படி நான் இறந்த பிறகு நடைபெறும் பிரச்னைகளைச் சுற்றி காட்சிகள் இருக்கும். நான் பிணமாக நடிப்பதை பற்றி எல்லாம் கவலைப்பட்டதில்லை. தொடர்ந்து இது போன்ற கேரக்டர்கள் அமைந்தால் என்னைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். என்றார்.