ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'ஜாலியோ ஜிம்கானா' . சக்தி சிதம்பரம் இயக்கியிருக்கிறார். ராஜன் மற்றும் நீலா தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் மடோனா, அபிராமி, யோகிபாபு, ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்திருக்கின்றனர். படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பிரபுதேவா பிணமாக நடித்துள்ளார்.
இதையொட்டி நடந்த படத்தின் அறிமுக நிகழ்வில் இயக்குநர் சக்தி சிதம்பரம், பேசியதாவது: கடந்த இரண்டு, மூன்று வருடங்களாகவே தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் வன்முறை, சாதியை மையப்படுத்தியே இருக்கிறது. டெட்பாடி, அதைத்தூக்கி செல்லும் ஹீரோவை மையப்படுத்திய கதை இது. கதை கேட்டதும் டெட்பாடியாக நடிக்கிறேன் என பிரபுதேவா சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பின்பு, அவரை மையப்படுத்தி நான்கு ஹீரோயின்களை கொண்டு வந்தோம்.
ஒன்றரை நாளில் நடக்கும் கதை இது. டெட்பாடியாக பிரபுதேவா நடிக்கும்போது அவர் முன்னாடி பலரும் நகைச்சுவை செய்து கொண்டிருப்பார்கள். அதெல்லாம் கட்டுப்படுத்திதான் அவர் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒன்றரை நாளில் நடக்கும் கதையில் பிரபுதேவா 110 நிமிடங்கள் பிணமாக நடித்துள்ளார். இது ஒரு சாதனையாகும். இதற்கு முன்பு 'மகளிர் மட்டும்' படத்தில் நாகேஷ் சார் பிணமாக நடித்தது ஒரு போர்ஷன்தான். ஆனால் பிரபுதேவா முழு படத்திலும் அப்படி நடித்திருக்கிறார்” என்றார்.
இந்தப்படம் இன்று(நவ., 22) திரைக்கு வந்துள்ளது.