ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவான கோவா சர்வதேச திரைப்பட விழா தற்போது நடந்து வருகிறது. இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்' படம் திரையிடப்படுகிறது. இதோடு தற்போது 'ஆசான்' என்கிற குறும்படமும் திரையிடப்படுகிறது.
இந்த படத்தை சமீபத்தில் வெளியாகி விருதுகளை பெற்ற 'கட்டில்' படத்தை இயக்கிய இ.வி.கணேஷ் பாபு இயக்கி உள்ளார். ஸ்ரீ மலைமேல் அய்யனார் மூவிஸ் சார்பில் வனிதா தயாரித்துள்ளார், ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார், என்.கே.ராஜராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இ.வி.கணேஷ்பாபு நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் ராமன் அப்துல்லா, தஞ்சை அமலன், ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர்
படத்தைப் பற்றி இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறும்போது “உலகம் முழுவதிலிருந்தும் திரைப்பட ஆளுமைகள் இந்த விழாவுக்கு வருகை தருகிறார்கள். அவர்களது திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்படுகிறது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச திரைப்பட விழாவில் எனது படமும், பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சிறுவயதில் மாணவர்கள் செய்யும் குற்றத்திற்கு அவர்களை தண்டிப்பதை விட, அந்தத் தவறை உணரச் செய்வதின் மூலம் அவர்கள் வாழ்வை, ஒரு ஆசிரியரால் உயர்த்த முடியும் என்ற கதைக்கருவை மையமாகக் கொண்டு ஆசான் உருவாக்கப்பட்டு இருக்கிறது” என்றார்.