மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகன் உட்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் தங்கலான். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படம் 1990 காலகட்ட கதையில் உருவாகி வருகிறது. கே ஜி எப் உருவாவதற்கு முன்பே அந்த கேஜிஎப் நிலத்தில் தங்கத்தை தோண்டி எடுத்த மக்களைப் பற்றிய கதையில் தங்கலான் உருவாகிறது. குறிப்பாக, பழங்குடியின மக்களின் வாழ்வியல் மற்றும் கலாச்சாரத்தை இந்த படம் சொல்லப்போகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த போது நடிகர் விக்ரமின் விலா எலும்பில் முறிவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த படத்தில் நடித்து வரும் பார்வதி ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில், ‛காதல், பணம், புகழைத் தவிர எனக்கு உண்மையை தாருங்கள். தங்கலான் படத்தில் நான் நடிக்கும் கதாபாத்திரத்துக்காக சென்ற இடங்கள், நான் தேர்ந்தெடுத்த விஷயங்கள் அனைத்தும் எனக்குள் எழுப்பி வைத்திருந்த சுவர், முகத்திரைகளை சுக்கு நூறாக உடைத்துள்ளது. கடைசியில் உண்மை மட்டுமே பிரதிபலித்தது. இந்த தங்கலான் எனது கேரியரில் மிக முக்கியமான திருப்பத்தை கொடுக்கக்கூடிய படமாக அமைந்துள்ளது' என்று பதிவிட்டு இருக்கிறார் பார்வதி.