தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

அனிருத்தின் லைவ் கான்சர்ட் இசை நிகழ்ச்சி தற்போது இந்தியாவின் பல நகரங்களில் சீரான இடைவெளியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்படி கொச்சியில் தனது லைவ் கான்சர்ட் இசை நிகழ்ச்சியை நடத்தினார் அனிருத். இந்த நிகழ்ச்சியில் முதல் பாடலாக அவர் 'தட்டற தட்டற' என்கிற பாடலை பாடி நிகழ்ச்சியை தொடங்கினார். இந்த நிகழ்வில் தன் அருகில் இருந்த இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வஹாப் உடன் கலந்துகொண்டு பார்வையாளர் பிரிவில் இருந்த நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இந்த பாடலை கேட்டதும் உற்சாக துள்ளலுடன் ஆட ஆரம்பித்தார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
கல்யாணியின் கொண்டாட்டத்திற்கு காரணமும் இருக்கிறது. மலையாளத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகி வரும் சேஷம் மைக்கில் பாத்திமா என்கிற படத்தில் தான் இந்த பாடல் இடம் பெறுகிறது. இந்த பாடலுக்கு ஹிருதயம் புகழ் இசை அமைப்பாளர் ஹேசம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். அனிருத் இந்த பாடலை பாடியுள்ளார். விரைவில் வெளிவர தயாராகி வரும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் மனு சி. குமார் என்பவர் இயக்கி உள்ளார்.
தனது பட பாடலை அனிருத் தனது நிகழ்ச்சியின் முதல் பாடலாக பாடியது தான் கல்யாணி பிரியதர்ஷன் உற்சாக கொண்டாட்டத்திற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.