2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? |
நடிகர் மோகன்லால் சில நாட்களுக்கு முன்பு, தான் நடித்து வந்த மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது படப்பிடிப்பு இல்லாததால் தனது குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு சுற்றுலா கிளம்பி சென்றுள்ளார்.
இந்த நிலையில் நடிகை ராதிகாவும் சிங்கப்பூரில் தனது குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கே மோகன்லால் தம்பதியை நேரில் சந்தித்த ராதிகா அந்த மகிழ்ச்சியுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். எண்பதுகளில் மோகன்லாலுடன் இணைந்து மலையாளத்தில் நடித்த ராதிகா அதன்பிறகு சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான இட்டிமானி மேட் இன் சைனா என்கிற படத்தில் மீண்டும் மோகன்லால் உடன் இணைந்து நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.