தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கிர்த்தி சனோன், சைப் அலிகான் நடிப்பில் வெளியான படம் ‛ஆதி புருஷ்'. ராமாயணத்தை தழுவி 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் இடம் பெற்ற காட்சிகள், கதாபாத்திரங்களின் உருவங்கள் மற்றும் வசனங்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின. இதுதொடர்பாக சில ஊர்களில் படக்குழுவினர் மீது புகார்கள் கூட அளிக்கப்பட்டன. இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தின் வசனகர்த்தா மனோஜ் முன்டாஷிர் சுக்லா நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‛‛ஆதிபுருஷ் படத்தினால் மக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டதை நான் ஏற்றுக் கொள்கிறேன். இதற்காக நான் எனது நிபந்தனையற்ற மன்னிப்பை கோருகிறேன். பிரபு பஜ்ரங் பாலி(அனுமன்) எங்களை ஒற்றுமையாக வைத்து, நமது புனிதமான சனாதனத்திற்கும், நமது தேசத்துக்கும் பலம் தரட்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.