ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கிர்த்தி சனோன், சைப் அலிகான் நடிப்பில் வெளியான படம் ‛ஆதி புருஷ்'. ராமாயணத்தை தழுவி 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் இடம் பெற்ற காட்சிகள், கதாபாத்திரங்களின் உருவங்கள் மற்றும் வசனங்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின. இதுதொடர்பாக சில ஊர்களில் படக்குழுவினர் மீது புகார்கள் கூட அளிக்கப்பட்டன. இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தின் வசனகர்த்தா மனோஜ் முன்டாஷிர் சுக்லா நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‛‛ஆதிபுருஷ் படத்தினால் மக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டதை நான் ஏற்றுக் கொள்கிறேன். இதற்காக நான் எனது நிபந்தனையற்ற மன்னிப்பை கோருகிறேன். பிரபு பஜ்ரங் பாலி(அனுமன்) எங்களை ஒற்றுமையாக வைத்து, நமது புனிதமான சனாதனத்திற்கும், நமது தேசத்துக்கும் பலம் தரட்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.