ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை தொடர்ந்து உதயநிதி, வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கி உள்ள படம் மாமன்னன். கடந்த ஜூன் 29ம் தேதி திரைக்கு வந்து இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இரண்டு வாரங்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் வசூல் 52கோடியை கடந்ததாக சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் படக்குழுவினரே தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், ‛‛மாமன்னன் படத்தில் நடித்த நடிகர் - நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அதையடுத்து என்னுடைய வாழ்க்கையில் பலமுறை நான் தற்கொலை செய்து கொள்ள நினைத்து இருக்கிறேன். அப்படி ஒரு முறை நான் தற்கொலைக்கு முயற்சி செய்தபோது வடிவேலு நடித்த காமெடியை பார்த்த நான், அந்த தற்கொலை முடிவை மாற்றிக் கொண்டேன். அந்த வகையில் என்னை தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றியவர் வடிவேலு தான் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.