ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகர் தனுஷ் ‛கேப்டன் மில்லர்' படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்து தனது 50வது படத்தை இயக்கி, நடித்து வருகிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக அறிவித்தனர். சென்னையில் ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் 500 வீடுகள் கொண்ட பிரமாண்ட அரங்கத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெய்ராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி என நட்சத்திர பட்டாளமே முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தனுஷின் அண்ணன் மற்றும் இயக்குனர் செல்வராகவன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, ஒரு பேட்டியில் தனுஷ் 50வது படத்தில் ஒரு நல்ல ரோல் உள்ளது. அதில் நான் தான் நடிப்பேன் என்று தனுஷிடம் கேட்டுள்ளதாக செல்வராகவன் கூறியிருந்தார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.