ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகை சாய் பல்லவியை பொறுத்தவரை அது எவ்வளவு பெரிய நடிகர்கள் படம் என்றாலும் தனக்கு நடிப்பதற்கு வாய்ப்பு உள்ள கனமான கதாபாத்திரங்கள் இருந்தால் மட்டுமே ஒப்புக் கொள்கிறார். இதனால் பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் இருக்கும் சாய்பல்லவி படப்பிடிப்பு இல்லாத நாட்களை சுற்றுப்பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். குறிப்பாக ஆன்மிகத்தில் நாட்டம் உள்ள சாய்பல்லவி சமீபத்தில் அமர்நாத் கோவிலுக்கு புனித யாத்திரை சென்று வந்துள்ளார் சாய்பல்லவி. உடன் அவரது பெற்றோரும் இந்த யாத்திரையில் பங்கெடுத்துள்ளனர்.
இந்த பயணம் மேற்கொண்டது குறித்து சிலிர்க்கும் சாய்பல்லவி, வயதான தன் பெற்றோர்களையும் அழைத்துக் கொண்டு இந்த புனித யாத்திரையை மேற்கொண்டபோது அவர்களுக்கு ஏற்பட்ட மூச்சிரைப்பு, நெஞ்சு வலி, பனிப்பொழிவினால் ஏற்பட்ட சறுக்கல்கள் இவற்றையெல்லாம் நேரிட்டபோது கடவுளை நோக்கி எதற்காக இவ்வளவு தூரத்தில் இருக்கிறாய் என்று கேள்வி எழுப்பத் தோன்றியது என்று கூறியுள்ளார்.
அதே சமயம் நாங்கள் நல்லபடியாக தரிசனம் செய்து திரும்பி வந்தபோது பல பேர் தங்களது பயணத்தை முழுவதுமாக தொடர முடியாமல் பாதியிலேயே முடித்துக் கொண்டதையும் பார்க்க முடிந்தது. அப்போதுதான் என்னுடைய கேள்விக்கான விடையும் கிடைத்தது என்று இந்த பயணம் குறித்து சற்று விரிவாகவே சிலாகித்துக் கூறியுள்ளார் சாய்பல்லவி.