கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
சின்னத்திரை நடிகையான நக்ஷத்திரா 'யாரடி நீ மோகினி', 'வள்ளித் திருமணம்' ஆகிய சீரியல்களின் மூலம் பிரபலமானார். கடந்த வருடம் ஜூலை மாதத்தில் காதலர் விஸ்வாவை கரம்பிடித்த நக்ஷத்திராவின் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்தது. அடுத்த சில மாதங்களிலேயே கருவுற்ற நக்ஷத்திராவுக்கு அண்மையில் தான் வளைகாப்பு நிகழ்வும் கோலாகலமாக நடந்தது. இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள நக்ஷத்திரா குழந்தையின் பிஞ்சு விரல்களின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்க்கும் பலரும் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளை நக்ஷத்திராவுக்கு தெரிவித்து வருகின்றனர்.