நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
தற்போது லியோ படத்தில் நடித்துள்ள விஜய், அடுத்தபடியாக வெங்கட் பிரபு இயக்கும் தனது 68வது படத்தில் நடிக்க போகிறார். அந்த படத்தை அடுத்து மூன்று ஆண்டுகள் விஜய் நடிப்பில் இருந்து விலகி இருக்கப் போவதாக கூறப்படும் நிலையில், வருகிற செப்டம்பர் மாதம் புதிய கட்சியை தொடங்க இருப்பதாகவும் தற்போது விஜய் வட்டாரங்களில் இருந்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கடந்த மாதம் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ - மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கிய விஜய், அதன் பிறகு காமராஜர் பிறந்த நாளில் இரவு பாடசாலை தொடங்குவதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, டெல்டா மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா? என்று மக்களிடத்தில் ஒரு சர்வே நடத்தி உள்ளார்கள். அதில், 70 சதவீத மக்கள் விஜய்யின் அரசியல் வருகைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்களாம் . இந்த சர்வே முடிவு விஜய் வட்டாரத்திற்கு புதிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.