தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தற்போது லியோ படத்தில் நடித்துள்ள விஜய், அடுத்தபடியாக வெங்கட் பிரபு இயக்கும் தனது 68வது படத்தில் நடிக்க போகிறார். அந்த படத்தை அடுத்து மூன்று ஆண்டுகள் விஜய் நடிப்பில் இருந்து விலகி இருக்கப் போவதாக கூறப்படும் நிலையில், வருகிற செப்டம்பர் மாதம் புதிய கட்சியை தொடங்க இருப்பதாகவும் தற்போது விஜய் வட்டாரங்களில் இருந்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கடந்த மாதம் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ - மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கிய விஜய், அதன் பிறகு காமராஜர் பிறந்த நாளில் இரவு பாடசாலை தொடங்குவதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, டெல்டா மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா? என்று மக்களிடத்தில் ஒரு சர்வே நடத்தி உள்ளார்கள். அதில், 70 சதவீத மக்கள் விஜய்யின் அரசியல் வருகைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்களாம் . இந்த சர்வே முடிவு விஜய் வட்டாரத்திற்கு புதிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.