மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ |
தெலுங்கு திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும் இயக்குனர் ராஜமவுலியின் ஆஸ்தான இசையமைப்பாளருமான மரகதமணி, தமிழில் எம்.எம்.கீரவாணி என்கிற பெயரிலும் இசையமைத்து வருகிறார். கடந்த வருடம் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் இவரது இசையில் சூப்பர் ஹிட்டான நாட்டு நாட்டு பாடலுக்கு இந்த வருடம் ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்த நிலையில் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் தற்போது சந்திரமுகி 2 மற்றும் ஜென்டில்மேன் 2 என இரண்டு சூப்பர்ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்களுக்கு இசையமைக்கிறார் மரகதமணி.
இதில் ஜென்டில்மேன் 2 படத்தின் பாடல் கம்போசிங் தற்போது கேரளாவில் கொச்சியில் உள்ள போல்காட்டி பேலஸில் நடைபெற்று வருகிறது. இதற்காக கேரளா வருகை தந்த இசையமைப்பாளர் மரகதமணி தான் வரும்போது தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனுக்கென கையோடு நான்கு வரிகளில் ஒரு வாழ்த்துப் பாடலையும் உருவாக்கி எடுத்து வந்திருந்தார்.
கொச்சியில் தன்னை கே.டி.குஞ்சுமோன் வரவேற்றபோது கேரளாவில் உள்ள சில கோரஸ் இசைக்கலைஞர்களை வைத்து தான் கொண்டு வந்த பாடலை இசைக்க வைத்து தயாரிப்பாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் மரகதமணி.