அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து கடந்த 2014ல் தெலுங்கானா மாநிலம் தனியாக பிரிந்து இன்றுடன் (ஜூன் 2) 10 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த நாள் இன்று விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் தெலுங்கானா மாநிலத்துக்கான ஒரு பாடலை உருவாக்கும் பொறுப்பை ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணியிடம் ஒப்படைத்தார் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி. ‛ஜெய ஜெய ஹே தெலுங்கானா' என்று துவங்கும் இந்த பாடலை ஆண்டே ஸ்ரீ என்பவர் எழுதியுள்ளார். அதே சமயம் இந்த பாடலுக்கு இசையமைக்க கீரவாணியை ஒப்பந்தம் செய்தது குறித்து தெலுங்கானா சினிமா இசையமைப்பாளர்கள் சங்கம் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் பெல்லப்பள்ளி மோகன் கூறும்போது, “தெலுங்கானா ஆந்தம் என்பது நம்முடைய உரிமை. பல போராட்டங்கள், சண்டைகளுக்கு இடையே இந்த மாநிலத்தை நாம் பெற்றோம். இந்த பயணத்தை நாம் கண்கூடாக பார்த்து வந்திருக்கிறோம். தெலுங்கானாவை சேர்ந்தவர் அல்லாத இசையமைப்பாளரான கீரவாணி இந்த விஷயங்களை புரிந்து கொண்டு இசையமைப்பார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை” என்று கூறியுள்ளார். இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் இருக்கும் கோவூர் என்கிற கிராமத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தெரிகிறது.