இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். இதையடுத்து ஹிந்தி படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதேப்போல் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பது மட்டும் அல்லாமல் முதன்மை கதாபாத்திரத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நடித்து கடந்தாண்டு வெளிவந்த சில படங்கள் எதுவும் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் இந்தாண்டு அவருக்கு தெலுங்கில் நானியின் ஜோடியாக நடித்த ‛தசரா', தமிழில் வெளிவந்த ‛மாமன்னன்' படத்தின் வெற்றி கீர்த்தி சுரேஷின் மார்க்கெட்டை மீண்டும் உயர்த்தியுள்ளது. அடுத்து ஹிந்தி சினிமாவிலும் கீர்த்தி சுரேஷ் என்ட்ரி ஆக உள்ளதால் இதுவரை ரூ.2 கோடி சம்பளம் வாங்கி வந்தவர் இப்போது ரூ.3 கோடியாக சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.