தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நடிகர் மோகன்லால் தற்போது மலையாளத்தில் மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தில் நடித்து முடித்து விட்டார். லிஜோ ஜோஸ் பள்ளிசேரி என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து தற்போது பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தெலுங்கில் தயாரிக்கும் விருஷபா என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் மோகன்லால். இந்த படத்தை கன்னட இயக்குனரான நந்தா கிஷோர் என்பவர் இயக்குகிறார். ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் இந்த படம் தயாராகிறது.
இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகை சிவரஞ்சனி தம்பதியின் மகன் ரோஷன் மேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை சிவரஞ்சனி தொண்ணூறுகளின் துவக்கத்தில் சின்ன மாப்ளே, காத்திருக்க நேரமில்லை, தலைவாசல் உள்ளிட்ட பல தமிழ்ப்படங்களில் நடித்தவர். தற்போது தனது மகன் அறிமுகமாகும் படம் என்பதால் சமீபத்தில் துவங்கிய விருஷபா படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை சிவரஞ்சனி சென்டிமென்டாக படப்பிடிப்பை கிளாப் அடித்து துவங்கி வைத்தார்.