2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? |
கடந்த 2008ம் ஆண்டில் சசிகுமார் இயக்கத்தில் வெளியாகி, வரவேற்பை பெற்ற படம் சுப்ரமணியபுரம். 1980கள் காலக்கட்டத்தை கண்முன் நிறுத்திய படம். காதல், நட்பு, துரோகம், பழிவாங்கல் ஆகியவற்றை கூறிய இதில் ஜெய், சசிகுமார், சமுத்திரக்கனி, சுவாதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஜேம்ஸ் வசந்தனின் இசையில் ‛‛கண்கள் இரண்டால்..., மதுர குலுங்க குலுங்க...'' ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. இந்த படம் திரைக்கு வந்து 15 ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் தமிழகம் முழுக்க ரீ-ரிலீஸ் ஆக இருப்பதாக நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார். அதில், ‛‛ஆகஸ்ட் 4ம் தேதி 2023 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்கங்களில் சுப்ரமணியபுரம் மீண்டும் வெளியிடப்படும். அந்த அனுபவத்தை மீண்டும் ஒருமுறை பெறுங்கள்'' என அவர் அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.