ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கேஜிஎப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல், தற்போது பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் நடிப்பில் சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கு முன்பு யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப் படங்கள் பெரிய அளவில் வசூல் சாதனை செய்ததால், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தற்போது சலார் படத்தின் கதை குறித்து ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் இப்படம் அம்மா - மகன் சென்ட்டிமென்ட் கதையில் உருவாகி இருப்பதாகவும், அம்மாவுக்காக எதையும் செய்யக்கூடிய மகனாக நடிக்கும் பிரபாஸ், தாய்க்கு கொடுத்த வாக்குறுதிக்கும், தனது நண்பனின் விசுவாசத்திற்கும் இடையில் போராடும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் படத்தில் ஆக்ஷனுக்கும் பஞ்சம் இருக்காதாம். ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தில் நண்பனாக நடித்துள்ள மலையாள நடிகர் பிருத்விராஜ், பிரபாஸின் நண்பராக இருந்து பின்னர் எதிரியாக உருவெடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் இந்த சலார் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 28ம் தேதி திரைக்கு வரவுள்ளது.