ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
''ஒரு சிறுகதையை படித்து சரியாக புரிந்து கொண்டால், சினிமாவுக்கான திரைக்கதை சிறப்பாக எழுதலாம் என்பதற்கு நானே உதாரணம்,'' என்கிறார் இயக்குனர் மிஷ்கின்.
சமீபத்தில் கோவை புத்தக கண்காட்சியில் நடந்த நுால் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனர் மிஷ்கின், சிறுகதைகள் குறித்து ஆழ்ந்த இலக்கிய ரசனையுடன் பேசி, வாசகர்களின் கைதட்டல்களை பெற்றார். அவர் பேசியதாவது:
கதை எழுதுவது கடினமான விஷயம். நான் 11 திரைக்கதைகள் எழுதி இருக்கிறேன். திரைக்கதையை பொறுத்தவரை 10 நிமிடங்களுக்குள் ஏதாவது திருப்பங்கள் வந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் படம் பார்ப்பவர்கள் ரசிப்பார்கள். இல்லை என்றால் படம் போரடிக்கிறது என்று எழுந்து போய்விடுவார்கள்.
சிறுகதை அப்படியில்லை, நாவல், நாடகங்களை விட கஷ்டமான வடிவம். நிறைய சிறுகதைகளை படித்தால்தான் சிறுகதை எழுத முடியும். அதேபோல் சினிமா எடுப்பதை விட குறும்படம் எடுப்பது கஷ்டம். ஒரு சிறுகதையை படித்து சரியாக புரிந்து கொண்டால், சினிமாவுக்கு திரைக்கதை நன்றாக எழுதலாம் என்பதற்கு நானே உதாரணம்.
நாவல் படிக்க எனக்கு நேரமில்லை. அதனால் டால்ஸ்டாய், ஆண்டன் செக்காவ் அல்லது ஏதாவது ஒரு ஐரோப்பிய சிறுகதையை படித்து கொண்டே இருப்பேன். சிறுகதை என் வாழ்க்கையை புரட்டி போடுகிறது. என் சிந்தனையை மாற்றுகிறது. கதை, கவிதை, ஓவியம் ஆகிய கலை வடிவங்கள் ஏன் படைக்கப்படுகின்றன என்றால், அது ஏதோ ஒரு வகையில் வாழ்க்கையின் அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது.
பலர் வாழ்நாள் முழுவதும் ஒரு புத்தகத்தை கூட படிக்காமல் இறந்து விடுகின்றனர். அது அர்த்தமற்ற வாழ்க்கையாகும். ஒரு நல்ல சிறுகதை மலர்களின் நறுமணத்தை அதிகப்படுத்துகிறது. ஒரு மரத்தை தொட்டுப்பார்த்து நன்றி சொல்ல வைக்கிறது. இலக்கிய வாசகனை சிறுகதைகள் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு அழைத்து செல்கிறது.
இவ்வாறு மிஷ்கின் பேசினார்.