இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சமீபத்தில் ஓடிடியில் வெளியான தமிழ் வெப் தொடர் 'ஸ்வீட் காரம் காபி'. பாட்டி லட்சுமி, அம்மா மதுபாலா ஆகியோருடன் பேத்தி சாந்தி பாலச்சந்திரன் சென்னையில் இருந்து கோவாவிற்கு காரில் தனியாக பயணம் செய்வது மாதிரியான கதை. மலையாளத்தில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய ஜல்லிக்கட்டு படத்தின் மூலம் புகழ்பெற்ற சாந்தி பாலச்சந்திரன் அதன்பிறகு பல மலையாள படங்களில் நடித்துள்ளார். இந்த தொடரின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார்.
தொடரில் நடித்திருப்பது பற்றி சாந்தி கூறும்போது "இந்த தொடர் பாட்டி, அம்மா, பேத்தி ஆகியோர் குடும்ப கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக ஒரு பயணம் மேற்கொள்வது மாதிரியான கதை. இதில் பாட்டியாக நடிக்க லட்சுமியையும், அம்மாவாக நடிக்க மதுபாலாவையும் தேர்வு செய்து விட்டார்கள். பேத்தியாக நடிக்க அவர்களின் முகசாயலில் உள்ள ஒருவரை தயாரிப்பாளர் ரேஷ்மா கட்டாலாவும், இயக்குநர் பிஜாய் நம்பியாரும் பலமொழிகளிலிருந்து என் வயதுடைய நடிகர்களைத் தேடி இருக்கிறார்கள். இறுதியாக, நான் பொருத்தமாக இருப்பேன் என்று முடிவு செய்து என்னை நடிக்க வைத்தார்கள். இதன் மூலம் தமிழுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்" என்றார்.