விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் |

சமீபத்தில் ஓடிடியில் வெளியான தமிழ் வெப் தொடர் 'ஸ்வீட் காரம் காபி'. பாட்டி லட்சுமி, அம்மா மதுபாலா ஆகியோருடன் பேத்தி சாந்தி பாலச்சந்திரன் சென்னையில் இருந்து கோவாவிற்கு காரில் தனியாக பயணம் செய்வது மாதிரியான கதை. மலையாளத்தில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய ஜல்லிக்கட்டு படத்தின் மூலம் புகழ்பெற்ற சாந்தி பாலச்சந்திரன் அதன்பிறகு பல மலையாள படங்களில் நடித்துள்ளார். இந்த தொடரின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார்.
தொடரில் நடித்திருப்பது பற்றி சாந்தி கூறும்போது "இந்த தொடர் பாட்டி, அம்மா, பேத்தி ஆகியோர் குடும்ப கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக ஒரு பயணம் மேற்கொள்வது மாதிரியான கதை. இதில் பாட்டியாக நடிக்க லட்சுமியையும், அம்மாவாக நடிக்க மதுபாலாவையும் தேர்வு செய்து விட்டார்கள். பேத்தியாக நடிக்க அவர்களின் முகசாயலில் உள்ள ஒருவரை தயாரிப்பாளர் ரேஷ்மா கட்டாலாவும், இயக்குநர் பிஜாய் நம்பியாரும் பலமொழிகளிலிருந்து என் வயதுடைய நடிகர்களைத் தேடி இருக்கிறார்கள். இறுதியாக, நான் பொருத்தமாக இருப்பேன் என்று முடிவு செய்து என்னை நடிக்க வைத்தார்கள். இதன் மூலம் தமிழுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்" என்றார்.