தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சமீபத்தில் மலையாளத்தில் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் வெளிவந்த படம் 2018 . உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வெளிவந்த இப்படம் மலையாள சினிமாவின் அதிக வசூல் செய்த படமாக மாறி சாதனை செய்தது. இதையடுத்து மலையாளத்தில் நடிகர் ஆசிப் அலியை வைத்து விரைவில் புதிய படத்தை இவர் இயக்கவுள்ளார்.
இதைத்தொடர்ந்து தமிழில் லைக்கா தயாரிப்பில் ஒரு புதிய படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்குகிறார் என சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். இதில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நிவின் பாலி ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இதில் ஹீரோவாக நடிக்க விக்ரம் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.