இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகை தமன்னா 'கேடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தமிழ் சினிமாவை கடந்து தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது தமிழில் 'ஜெயிலர்' படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார். இதன் புரொமோஷனுகாக யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார் தமன்னா.
அதில் "நான் நடித்ததில் சுமாரான படமென்றால் நிறைய படம் இருக்கு. சுறா படம் எனக்கு பிடிக்கும். இருந்தாலும் அந்த படம் தான் நான் நடித்ததில் மோசமான படம் என நினைக்கிறேன். அந்த படத்தில் நிறைய இடங்களில் நான் கேவலமா இருந்தேன். இனிமேல் அது போன்ற படங்களில் நடிக்க மாட்டேன். சுறா படம் நல்லா போகாது என படப்பிடிப்பின் போதே எனக்கு தோனுச்சு. நிறைய படங்கள் நாம் நடிக்கும் போதே தோணும். அது சரியா போகாது. வெற்றி, தோல்வியை தாண்டி நம்ம அந்த படத்தில் ஒப்பந்தமாகிருக்கோம் என்பதற்காக மட்டும் அதில் பல சூழ்நிலைகளில் நடிக்க வேண்டி உள்ளது. சினிமாவில் கோடி கணக்கில் பணம் போடுகின்றனர். அதை உணர்ந்து அந்த படத்தை முடித்து கொடுக்க வேண்டியது நம் கடமை " என இவ்வாறு நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.