ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இயக்குனர்கள் புஷ்கர், காயத்ரி கிரியேட்டிவ் இயக்குனராக பணியாற்றி தயாரித்த வெப் தொடர் 'சுழல்' . பிரம்மா மற்றும் அனுசரன் முருகையன் இயக்கத்தில், சாம் சி.எஸ் இசையில் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியானது. இதில் பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, கதிர், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெண் குழந்தைகள் குடும்ப உறுப்பினர்களாலேயே எந்த அளவுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்கிற கதையை கோவில் திருவிழாக்களில் நடக்கும் மயான கொள்ளை நிகழ்ச்சியோடு இணைத்து திகில் தொடராக தந்திருந்தார்கள்.
இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் தயாரிக்கப்படும் என்று புஷ்கர், காயத்ரி கூறியுள்ளனர். இரண்டாம் பாகத்துக்கான முதல்கட்ட பணி தொடங்கி உள்ளது. ஸ்கிரிப்ட் பணிகளும், லொக்கேஷன் தேர்வு பணிகளும் மும்முரமாக நடந்து வருவதாக அவர்கள் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளனர்.