இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ரித்விக் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் " தொடு தூரம் ". முகமரியான் படத்தை இயக்கிய சாய் மோரா இந்த படத்தை இயக்குகிறார். கேரள நாட்டிளம் பெண்களுடனே, சாயம், பட்டதாரி போன்ற படங்களில் நடித்த அபி சரவணன் தனது பெயரை விஜய் விஷ்வா என மாற்றிக் கொண்டு இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
மற்றும் கஞ்சா கருப்பு, மொட்ட ராஜேந்திரன், சாய் தீனா, மைம் கோபி, விஜய் டிவி பாலா, தீனா, ஆரஞ்சு மிட்டாய் பிரபாகர் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஆலியா என்ற குழந்தை நட்சத்திரம் முக்கிய கதாபாதிரத்தில் அறிமுகமாகிறார். ஜெய்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். சி.சத்யா இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் சாய் மோரா கூறியதாவது: இன்றைய கால கட்டத்தில் நடக்கும் பாலியல் குற்றங்களின் பின்னனியில் திரில்லர் படமாக உருவாக்குகிறோம். பெண் குழந்தைகளுக்கு எப்படியான பாதுகாப்பை பெற்றோர்கள் வழங்க வேண்டும் என்பதை நேர்த்தியாக சொல்லும் படம். ஆகஸ்ட் இறுதியில் ஏற்காட்டில் படப்பிடிப்பு முழுவதும் நடைபெற இருக்கிறது என்றார்.