தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் மாமன்னன். தியேட்டரில் ஓடி முடித்து விட்ட இந்த படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இயக்குனர் பேரரசு அளித்துள்ள ஒரு பேட்டியில், ஒரு விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். அவர் கூறுகையில், கமல்ஹாசன் முன்னிலையில் தேவர் மகன் படம் பற்றி பேசினார் மாரி செல்வராஜ். அந்த தேவர் சமூகத்திற்குள் என் அப்பா இருந்தால் எப்படி இருக்கும் என்பது தான் இந்த படம் என அவர் கூறினார். அதனால் இந்த படத்தில் வில்லனாக சித்தரிக்கப்பட்ட ரத்னவேல் வேடத்தில் நடித்த பஹத் பாசில் தேவர் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதை அவரே சொல்லிவிட்டார். ஆனால் இந்த படத்தில் நடித்துள்ள உதயநிதி அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் ஜாதிய அடையாளத்தை வெளிப்படுத்தும் இந்த படம் அவருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படுத்தாது. ஆனால் அவருக்கு எல்லா சாதிக்காரர்களும் ஓட்டு போடுகிறார்கள். அதனால் இது போன்ற ஒரு சாதி படத்தில் அவர் நடித்தது ரொம்ப தவறு என்று தன்னுடைய விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் இயக்குனர் பேரரசு.