தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தென்னிந்திய சினிமாக்களில் நடித்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், சமீபத்தில் கர்நாடகா மாநிலம் சிவ மொக்காவில் உள்ள ஒரு கல்லூரியில், தியேட்டர் வசனம், சினிமா, சமூகம் என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். ஆனால் கல்லூரிக்கு தொடர்பில்லாத தனியார் நிகழ்ச்சியை எப்படி கல்லூரி வளாக்கத்திற்குள் நடத்தலாம் என்று அதற்கு எதிராக அந்த கல்லூரியை சேர்ந்த சில மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். அதோடு நடிகர் பிரகாஷ்ராஜ் கல்லூரிக்கு வருவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

ஆனபோதிலும் மாணவர்களின் எதிர்ப்பை மீறி இந்த நிகழ்ச்சியில் பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து அந்த நிகழ்ச்சி முடிந்து பிரகாஷ்ராஜ் அங்கிருந்து வெளியேறியதும், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த மாணவர்கள், அந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் கோமியத்தை கொண்டு வந்து தெளித்து சுத்தம் செய்து உள்ளார்கள். அது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.