அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
தென்னிந்திய சினிமாக்களில் நடித்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், சமீபத்தில் கர்நாடகா மாநிலம் சிவ மொக்காவில் உள்ள ஒரு கல்லூரியில், தியேட்டர் வசனம், சினிமா, சமூகம் என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். ஆனால் கல்லூரிக்கு தொடர்பில்லாத தனியார் நிகழ்ச்சியை எப்படி கல்லூரி வளாக்கத்திற்குள் நடத்தலாம் என்று அதற்கு எதிராக அந்த கல்லூரியை சேர்ந்த சில மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். அதோடு நடிகர் பிரகாஷ்ராஜ் கல்லூரிக்கு வருவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
ஆனபோதிலும் மாணவர்களின் எதிர்ப்பை மீறி இந்த நிகழ்ச்சியில் பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து அந்த நிகழ்ச்சி முடிந்து பிரகாஷ்ராஜ் அங்கிருந்து வெளியேறியதும், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த மாணவர்கள், அந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் கோமியத்தை கொண்டு வந்து தெளித்து சுத்தம் செய்து உள்ளார்கள். அது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.