தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ஏ.ஆர்.ரஹ்மான் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்து 30 ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து, நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திறந்தவெளி மைதானத்தில் நடந்த இந்த இசை நிகழ்ச்சியை ரசிக்க ஏராளமான ரசிகர்கள் படையெடுத்தார்கள். ஆனால் அப்போது திடீரென மழை பெய்ததால் மைதானத்தில் தண்ணீர் தேங்கியது. இதனால் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்கள்.
இப்படி தனது இசை நிகழ்ச்சி ரத்தானது குறித்து டுவிட்டரில் ரசிகர்களுக்கு வருத்தம் தெரிவித்த ஏ.ஆர். ரஹ்மான் ஆறுதல் கூறியிருந்தார். அதோடு அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் சென்னையில் சர்வதேச தரத்தில் இசை நிகழ்ச்சிக்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று தான் நம்புவதாகவும் அந்த பதிவில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் பதிவுக்கு முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பதில் கொடுத்துள்ளார். சென்னையின் நீண்ட நாள் ஆசை விரைவில் நிறைவேறும். கிழக்கு கடற்கரைச் சாலையில் பெரிய அளவிலான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு கலைஞர் கன்வென்ஷன் சென்டர் அமையவுள்ளதாக ஸ்டாலின் அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார்.