ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

ஏ.ஆர்.ரஹ்மான் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்து 30 ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து, நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திறந்தவெளி மைதானத்தில் நடந்த இந்த இசை நிகழ்ச்சியை ரசிக்க ஏராளமான ரசிகர்கள் படையெடுத்தார்கள். ஆனால் அப்போது திடீரென மழை பெய்ததால் மைதானத்தில் தண்ணீர் தேங்கியது. இதனால் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்கள்.
இப்படி தனது இசை நிகழ்ச்சி ரத்தானது குறித்து டுவிட்டரில் ரசிகர்களுக்கு வருத்தம் தெரிவித்த ஏ.ஆர். ரஹ்மான் ஆறுதல் கூறியிருந்தார். அதோடு அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் சென்னையில் சர்வதேச தரத்தில் இசை நிகழ்ச்சிக்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று தான் நம்புவதாகவும் அந்த பதிவில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் பதிவுக்கு முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பதில் கொடுத்துள்ளார். சென்னையின் நீண்ட நாள் ஆசை விரைவில் நிறைவேறும். கிழக்கு கடற்கரைச் சாலையில் பெரிய அளவிலான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு கலைஞர் கன்வென்ஷன் சென்டர் அமையவுள்ளதாக ஸ்டாலின் அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார்.